ஒரே தேவன் நீங்கள் ஆராதிக்கிற தேவன் யார்? (ONE GOD) கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! கிறிஸ்தவ உலகில் தேவன் மனிதனுக்கு அருளிய பரிசுத்த வேதாகமத்திற்கு, 1200க்கும் மேற்பட்ட சபை, ஸ்தாபன அமைப்புகள் சுய வியாக்கியானங்களை கொடுத்து, வேதத்தின் உண்மையான காரியங்களை (தேவ இரகசியங்களை) மறைக்கிறது. வேதாகமம் (Bible) முதன் முறையாக 10 கட்டளைகளாக தீர்க்கதரிசி மோசேயின் மூலமாக மனிதனுக்கு கொடுக்கப்பட்டது. அந்த கட்டளையில் இஸ்ரவேலே, கேள்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். (உபா. 6:4) என்று எழுதப்பட்டுள்ளது. வேதபாரகரில் ஒருவன் இயேசுவினிடத்தில் வந்து கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை (கட்டளை) எது என்று கேட்டான். அதற்கு இயேசு மேற்கூரிய வசனத்தையே குறிப்பிட்டார் (மாற்கு. 12: 28,29) என்பதை நினைத்துப் பாருங்கள். தேவனே தனது வார்த்தைக்கு சொந்த வியாக்கியானி. மேலும் வேதாகமம் எபேசி. 4: 4-6ல் ஒரே கர்த்தரும் ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும், ஒரே தேவனும் பிதாவும் உண்டு, அவர் எல்லார் மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர் என்று கூறுகிறது. ஆகவே, வேதாகமம் ஒரே தேவனை குறித்து தான் பேசுகிறது. அந்த தேவன் விசுவாசத்தின் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு தன்னை வெளிப்படுத்தும்போது எல்ஷடாய் (El-shadai), ஏலோஹிம் (Elohim) ஆகவும், மோசேக்கு இருக்கிறவராய் இருக்கிறேன், (I AM THAT I AM) என்றும், இஸ்ரவேலுக்கு யெகோவா (Jehovah) என்றும், கர்த்தர் என்றும், நியாயாதிபதிகளின் நாட்களில் மனோவாவிற்கு அதிசயம் என்றும், அப்போஸ்தலனாகிய பவுலுக்கு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்றும், வெளிப்பாட்டின் புத்தகத்தில் யோவானுக்கு வார்த்தை என்றும் தன்னை பல பட்டப் பெயர்களில் (Titles) வெளிப்படுத்தினார். ஏசாயா தீர்க்கதரிசி: 7:14, 9:6 மற்றும் 1 தீமோத்தேயு 3:16ன்படி தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார். தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார்; மகிமையிலே ஏறெடுத்துக் கொள்ளப்பட்டார். யோவான் 1:1-ல் ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. (யோ.1:14) அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம். பழைய ஏற்பாட்டில் தேவன் இஸ்ரவேல் ஜனங்களோடு தீர்க்கதரிசிகள், நியாயாதிபதிகள் மூலம் பிதாவாக இடைப்பட்டார். (God above us). I புரிந்து கொள்ளமுடியாமல் இருந்த இந்தப்பிதாவை, புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து குமாரனாய் மாம்சத்தில் வெளிப்பட்டு பிதாவை வெளிப்படுத்தினார். (God with us). | காணக்கூடாத தேவன், புரிந்து கொள்ள முடியாத தேவன், ஒருவராலும் தொடக் கூடாத தேவன், நாம் அவரைக் காணத்தக்கதாக, புரிந்து கொள்ளத்தக்கதாக, தொடக்கூடிய தேவனாக பரிசுத்த ஆவியாக (God in us) நமக்குள் வாசம் செய்கிறார். அவரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. | நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார் (யோ. 8:24). பழைய ஏற்பாட்டின் யெகோவா தான் புதிய ஏற்பாட்டின் இயேசு கிறிஸ்து. மேலும் இயேசு: நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக் கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார். (யோ. 14:6-7) என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான். (யோ.14:9) நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். (யோ.10:30). உம்முடைய பிதா எங்கே என்றார்கள், இயேசு பிரதியுத்தரமாக: என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார். (யோ.8:19) வேதாகமத்தில் திரித்துவமோ, அல்லது ஒருத்துவமோ இல்லை. அவர் மாறாதவர், அவரே தீர்க்கதரிசி. அவர் தீர்க்கதரிசிகளுக்குள் இருந்தார், அவர் சங்கீதங்களில் இருந்தார், அவர் சரித்திரத்தில் இருந்தார், இனி நிகழவிருக்கும் காரியங்களிலும் அவர் இருக்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். (எபி. 13:8). வேதாகமத்தின் மையப் பொருள் இயேசுகிறிஸ்துவே. வேதாகமம் முழுவதும் அவரையே சுட்டிக் காட்டுகிறது. நீங்கள் வேதத்தைப் படிக்கும் போது ஒவ்வொரு வேத வாக்கியத்திலும் கிறிஸ்துவை காணமுடியாவிட்டால் மறுபடியும் வேதத்தை படியுங்கள். வேதாகமம் கிறிஸ்துவாகும். அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்து கொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்கு புத்தியை தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார். (1யோ. 5:20). ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன் (யோ.17:3). மேலும், தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே (1தீமோ.2:5). வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன், ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன். (வெளி. 3:22). ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்தில் நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன். ஏசாயா 42:8. எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்கு பின் இருப்பதும் இல்லை. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை. நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்கு சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நாள் உண்டாகததற்கு முன்னும் நானே இருக்கிறேன். என் கைக்கு தப்புவிக்கத்தக்கவன் இல்லை ; நான் செய்கிறதை தடுப்பன் யார்? ஏசா. 43:10-13 நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். மேலும் தேவனுக்கு மூவகை நோக்கங்கள் இருந்தன. முதலாவது நோக்கம் : தேவன் தம்மை மக்களுக்கு வெளிப் படுத்த சித்தம் கொண்டார். அவர் மனிதனாக வெளிப்பட்டு மானிடருடன் தம்மை ஒன்று படுத்திக் கொண்டு கிறிஸ்துவாக தம்மை வெளிப்படுத்துவதே அவருடைய மூவகை நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. இரண்டாவது நோக்கம் : தமது சரீரமாகிய விசுவாசிகளுக்கு அதாவது அவரது மணவாட்டிக்கு எல்லாவற்றிலும் முதல்வராக இருந்து, மக்களுக்குள் வாழ அவர் சித்தம் கொண்டார். மூன்றாவது நோக்கம் : முதலாம் ஆதாமின் பாவத்தின் காரணமாக இழந்துபோன ராஜ்ஜியத்தை திரும்பவும் அதற்குரிய ஸ்தானத்தில் நிலை நிறுத்த அவர் நோக்கம் கொண்டார். சகோதர சகோதரிகளே, வேதாகமமானது, ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் புத்தகம் வரை மனிதன் மூலமாய் தேவனால் வெளிப்படுத்தப்பட்டு எழுதப்பட்ட வார்த்தையாக இருக்கிறது. எப்படியெனில், வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. 11 தீமோ. 3:16. எனவே வேதாகமத்தில் குறிப்பிட்ட புத்தகங்கள் மட்டும் வேத வார்த்தை என்றும் மற்றவை மனித வார்த்தைகள் என்றும் சொல்லக் கூடாது. ஆகவே நம்முடைய தேவன் குழப்பத்தின் தேவன் அல்ல. நீங்கள் வேதத்தின் ஊடாக ஆராய்ந்து பார்ப்பீர்களானால், தீர்க்கதரிசிகள் முதல் அப்போஸ்தலர்கள் வரை எல்லோரும் வேதத்தை வெவ்வேறு கால இடைவெளியில் (பரிசுத்த ஆவியினால்) எழுதியிருந்தாலும், அவர்கள் தேவன் ஒருவரே என்றும் அந்த தேவனுடைய பெயர் (நாமம்) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று அறிவித்திருக்கிறார்கள். அதை தான் இயேசுவும் யோ.5:39ல் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள் என்னை குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே என்றார். நண்பர்களே, தேவனை ஒருத்துவம், இருத்துவம், திரித்துவம் என்றும், இயேசுவை மனிதன் மற்றும் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் இன்னும் பல்வேறு கூற்றுகளை மனித ஞானம் கூறுகிறது எபே. 4:14. முடிவாக ரோமர் 9:5ல் இவர் (இயேசு கிறிஸ்து) என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன் என்று வேதாகமம் கூறுகிறது. எனவே, வேதாகமத்தில் நம்முடைய பிதாக்களுக்கு கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்கு திரும்பும்படி தேவன் உங்களை வழிநடத்துவாராக. மல்கியா 4:6 I இந்த சிறிய கைப்பிரதியில் எல்லாவற்றையும் விவரமாய் எழுத முடியவில்லை ..